×

உடுமலையில் தரமற்ற முறையில் தயார் செய்த 32 கிலோ இனிப்பு, காரம் பறிமுதல்

உடுமலை, அக். 25: உடுமலையில் தரமற்ற வகையில் தயார் செய்த இனிப்பு, கார வகைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உடுமலை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று இனிப்பு, காரம் தயாரிக்கும் இடம் மற்றும் விற்பனை செய்யப்படும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உடுமலை பொள்ளாச்சி ரோடு, சத்திரம் வீதி, பழனி ரோடு, கல்பனா ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு, மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 19 கிலோ இனிப்பு வகைகள், லேபிள் இல்லாமலும், தரமற்ற முறையிலும் தயாரித்த 13 கிலோ கார வகைகளை பறிமுதல் செய்தனர். இதுபோன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள், சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையிலேயே அழிக்கப்பட்டது.

Tags : Udumalai ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு