×

உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

 

உடுமலை, ஏப். 26: கோடையில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் உடுமலை எலையமுத்தூர் பிரிவில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை நகர திமுக செயலாளர் வேலுச்சாமி திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க, கடும் வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு உடுமலை நகர திமுக சார்பாக உடுமலை எலையமுத்தூர் பிரிவில் (விஏவி பள்ளி அருகே) நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

நீர் மோர் பந்தலை நகர திமுக செயலாளர் வேலுச்சாமி திறந்து வைத்து மக்களுக்கு தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத்தலைவர் கலைராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் யுஎன்பி குமார், நகர துணைச்செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் ஆறுச்சாமி வின்சென்ட் ஜோசப், லோகேஷ் மற்றும் கிளை திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Udumalai City DMK ,Nemor Pandal ,Udumalai ,DMK ,city secretary ,Veluchami ,Neer Mor ,Panthalon ,Udumalai Eliyamuthur ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில்...