×

ஆழ்வார்குறிச்சி அருகே 33 ஆட்டுக்குட்டிகள் மர்ம சாவு

கடையம், அக்.16: ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் பட்டியில் இருந்த 33 ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள செட்டிகுளம் வஉசி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன் (60). இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். பரமசிவன் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்று வருவார்.

இந்நிலையில் நேற்று 30க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை சுடலை மாடசாமி கோவில் அருகில் பட்டியில் விட்டுவிட்டு பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மீண்டும் மாலையில் வந்து பார்த்த போது பட்டியில் இருந்த 33 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்து கிடந்தன.
தகவலறிந்ததும் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் காஜாமுகைதீன், தனிப்பிரிவு ஏட்டு முருகன் ஆகியோர் சம்பவ இடத்தில் வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் ஆபிரஹாம் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்று கால்நடை மருத்துவர்கள் வந்து ஆட்டுக் குட்டிகள் இறந்தது குறித்து ஆய்வு செய்வர் எனக் கூறினார்.

Tags : death ,Alwarikurichi ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...