×

மது குடித்ததை தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்திக்குத்து

ஓமலூர், அக்.15: ஓமலூர் அருகே பச்சனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமோகன் (45). கூலிதொழிலாளியான இவரது மகன் மோகன்(22). கட்டிட தொழிலாளியான இவரது வீட்டிற்கு அருகே சமுதாய கூடத்தின் மொட்டை மாடியில் அமர்ந்தவாறு அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், அசோக்குமார் உள்ளிட்டோர் மது அருந்தியுள்ளனர். பின்னர், காலி மது பாட்டில்களை மோகன் வீட்டு வாசலில் போட்டு உடைத்துள்ளனர். இதனை தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டது. அப்போது, “அப்படித்தான் பாட்டில்களை உடைப்போம், மீறி கேட்டால் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர். மேலும், இருவரும் மோகன் வீட்டிற்கே சென்று அவரை கத்தியால் குத்தியும், பீர்பாட்டிலை உடைத்தும் தாக்கியுள்ளனர். இதை பார்த்த ராஜமோகன் அவர்களை தடுத்த போது அவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அசோக்குமாரை என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மீதமுள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா