×

தச்சு தொழிலாளி தூக்கில் தற்கொலை

பாகூர், அக். 15: கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (43). தச்சுத் தொழிலாளி இவர் கடந்த 3 வருடங்களாக பாகூர் அருகே குருவிநத்தம் சிவசக்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு எழிலரசி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம். நேற்று முன்தினம் காலை மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது மனமுடைந்த சீனிவாசன் மனைவி மற்றும் குழந்தைகளை வெளியே தள்ளிவிட்டு வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு சேலையால் தூக்குப் போட்டுக்கொண்டார்.வெகு நேரமாகியும் கணவன் கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி பின் பக்கமாக சென்று பார்த்த போது கணவர் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டு பிணமாக தொங்கியதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து பாகூர் காவல் நிலையத்தில் எழிலரசி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Carpenter ,suicide ,
× RELATED விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி