×

வாய்க்கால் தூர்வாராததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

சிதம்பரம், அக். 10: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வயலூர் முதல் லால்புரம் வரை வடக்கு பூதங்குடி கிளை வாய்க்கால் தூர்வாரப்படாததால் உரிய தண்ணீர் இன்றி விவசாயிகள் பாதித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் விவசாயிகள் பாசன வசதி செய்ய முடியாமல் அவதியுற்று வந்தனர். வயலூர் வடக்கு பூதங்குடி கிளை வாய்க்கால் முதல் லால்புரம் சிவகாமசுந்தரி ஓடை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட வேண்டும் என கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் தமிமுன்அன்சாரி முன்னிலையில் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அயன்துரை, விவாசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடனடியாக வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டதால் போராட்டததை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags : protest ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...