×

காவல் நிலையத்தில் திரண்ட அதிமுகவினர்

 

கடலூர், ஏப். 29: கடலூர் முதுநகர் மோகன் சிங் தெருவை சேர்ந்தவர் கந்தன். அதிமுக பிரமுகரான இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் கடலூர் முதுநகரிலிருந்து பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். சிவானந்தபுரம் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்ற காரின் மீது கந்தன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. நின்றிருந்த காரில் அதிமுக மாநகராட்சி கவுன்சிலரான பரணி முருகன் மற்றும் குடும்பத்தினர் இருந்துள்ளனர். அப்போது கந்தன் தரப்புக்கும், பரணி முருகன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த முதுநகர் போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இரு தரப்பினரும் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கந்தனும், பரணி முருகனும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காவல் நிலையத்தில் திரண்ட அதிமுகவினர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Cuddalore ,Mohan Singh Street, Mutunagar, Cuddalore ,center ,Patirikuppam ,Sivananthapuram Private School ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி