×

சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சிதம்பரம், ஏப். 28: 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி பின்னர் திருமணம் செய்து கொண்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கார்த்திக்(22). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி கிள்ளை பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூவழகி மற்றும் போலீசார் சென்று இது குறித்து விசாரணை செய்தனர். தொடர்ந்து சிறுமியை கர்ப்பமாக்கி, திருமணம் செய்த கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

The post சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Mariyappan ,Karthik ,Killai ,Dinakaran ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்