திருப்பூர், அக்.2:திருப்பூர் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை கல்லூரி தாளாளர் கீதா தங்கராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் தங்கராஜன் காந்தியடிகளின் கோட்பாடுகள் குறித்து மாணவர்களிடை சிறப்புரை ஆற்றினார். இதில் அனைவரும் கதர் ஆடை அணிந்து பங்கேற்றனர். கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பொன்ராம் பரிசுகளை வழங்கினார். மாணவ தலைவி ஐஸ்வர்யா லட்சுமி நன்றி கூறினார்.