×

ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி மக்கள் கையெழுத்து இயக்கம்

உளுந்தூர்பேட்டை, அக். 1: உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்திற்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர். இது மட்டுமின்றி பிரசித்திப்பெற்ற லட்சுமிநரசிம்மர் கோயிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். இந்த ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மோகன் இந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில் சர்க்கரை ஆலை இயக்குனர் ஜோதிராமன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்கள். ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பரிக்கல் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : railway bridge ,
× RELATED பாம்பன் ரயில் பாலத்தில் ‘செல்பி’...