×

உத்தமபாளையத்தில் கருத்துப்படம் வரைந்து தூய்மை இந்தியா பிரசாரம்

உத்தமபாளையம், அக்.1: உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரி மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டம் பற்றி சுவர்களில் கருத்துப்படம் வரைந்து பிரசாரம் செய்தனர்.உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் என்சிசி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் பற்றி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரும், என்சிசி அதிகாரியுமான லெப்டினன்ட் ஜென்ரல் அப்துல்காதர் தலைமையில் பசுமை இந்தியா, தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் ஆற்றவேண்டிய பணிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. இதேபோல் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை சுகாதாரம், சுற்றுப்புற தூய்மை பற்றி சுவர்களில் கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டன. இதனை பொது இடங்களில் மக்களிடம் காட்டி விளக்கம் அளித்தனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு