×

பூச்சி மருந்து குடித்த போலீஸ் எஸ்ஐ சாவு

வாழப்பாடி. அக்.1 : வாழப்பாடியில் நூல் நிலையம் அருகே ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ சுகவனம்(62), கடந்த சில வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவருடன் இணைந்து சீட்டு நடத்தி வந்தவர், 2 லட்சம் கொடுக்கல் வாங்கல் தகராறில், இவர் மீது புகார் கொடுத்துள்ளார். இதனால், மனமுடைந்த சுகவனம், பூச்சி மருந்து குடித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Police SI ,
× RELATED பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது