×

தர்மபுரியில் ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல்

தர்மபுரி, அக்.1: தர்மபுரி மாவட்ட ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல், தர்மபுரி பெரியார் மன்றத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது: ரேஷன் கடை பணியாளர்களின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல், மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. இறுதி கட்டமாக, மாநில தேர்தல் நடத்தி மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநில பொதுக்குழுவில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவுகளை வெளியிட உள்ளோம்.

அனைத்து மாவட்டங்களிலும், அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடம்  காலியாக உள்ளன. இந்த நிலையில், கூடுதலாக சுமார் ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்களை, கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்காக பயிற்சிக்கு அனுப்ப உள்ளனர். இதனால், காலி பணியிடம் மேலும் அதிகரிக்கும். எனவே, அனைத்து காலி பணியிடங்களையும் தமிழக அரசு நிரப்ப வேண்டும். அப்போது தான் அங்கன்வாடி திட்டம் சிறப்பாக செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.இதில், அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி, மாநில பொது செயலாளர் கோபிநாத், மாநில துணை தலைவர்கள் சீனிவாசன், சிவகுமார், ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் ஜெயச்சந்திரராஜா, முன்னாள் தலைவர் தனசேகரன், பொருளாளர் ஜான்ஜோசப், செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Elections ,ration shop employees union ,Dharmapuri ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்