×

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 10 சிறுவர்கள் காயம் : பொதுமக்கள் அச்சம்

பள்ளிப்பட்டு:  பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக  தெரு நாய்கள் பிடிக்கப்படாததால், நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால், இரவு நேரத்தில்  தெருக்களில் சென்று வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.  பகல் நேரங்களில் வீடுகளுக்கு முன்பு, வீதிகளில் தனியாக விளையாடும் சிறுவர்களை நாய்கள் கடித்து கொதறி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சிறுவர்களை  நாய்கள் கடித்ததில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாய்களுக்கு வெறி பிடிக்கும் அபாயம் உள்ளதால் பேரூராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுத்து  நாய்களுக்கு கருத்தடை செய்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : children ,
× RELATED மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு...