×

மின்பொறியாளரை திட்டியவர் கைது

ரிஷிவந்தியம், செப். 25: ரிஷிவந்தியம் அருகே ஜி.அரியூரில் இளமின் பொறியாளராக சவுந்தரராஜன் மகன் மரியராஜ் பணியாற்றி வருகிறார். இவரிடம் பல்லவாடி கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கூத்தான் மகன் செல்வநாதன் என்பவர் அவரது கடைக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட இளமின்பொறியாளர் மரியராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தபோது மின் இணைப்பு பெறஉள்ள இடம் கூட்டு பட்டாவாக இருந்தது. இதையடுத்து செல்வநாதனிடம்  ஒப்புதல் பத்திரம் கேட்டுள்ளார். இது சம்பந்தமாக செல்வநாதனின் தம்பி திரிசங்குக்கு போன்செய்து (34) மரியராஜ் பேசியுள்ளார். அப்போது திரிசங்கு மரியராஜை ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும் வாட்ஸ்அப்பிலும் ஆபாச படங்களை கிராபிக்ஸ் செய்து அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் மரியராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருசங்கை கைது செய்தனர்.

Tags : miner ,
× RELATED மண்ணின் மைந்தரிடம் 207 ஓட்டுகளில் வெற்றியை பறிகொடுத்த மாப்பிள்ளை