ஏர்வாடி, செப். 24: ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில். 2006-07ம் ஆண்டு பிளஸ்2 படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தங்கமலை தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஆசாத், ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்கவேலு முன்னாள் மாணவர் சங்க செயலாளர் மோகன் குமார ராஜா, துணை தலைவர் மதார் சாஹிப், கணினி ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் தாங்கள் தற்போது பணியாற்றும் இடங்களை தெரிவித்த பள்ளிக்கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டனர். அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். ரிஸ்வான், தாமோதரன், அரவிந்த் மற்றும் 2006ம் ஆண்டு படித்த மாணவர்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.