×

மலையில் பதுக்கிய கள்ளச்சாராயம், ஊறல் பறிமுதல்: 3 பேருக்கு வலை

திருக்கோவிலூர், செப். 24:   திருக்கோவிலூர் அருகே மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 1500 லிட்டர் ஊறல், 100 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
 திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார், வீரப்பாண்டி பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் கருப்பு மணிகண்டன் என்பவர் பெரிய ஏரி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 750 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் தப்பியோடிய கருப்பு மணிகண்டனை தேடி வருகின்றனர். இதேபோல் தண்டரை மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக வீரபாண்டி பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் சுந்தரமூர்த்தி, கண்ணன் மகன் சேட்டு ஆகியோர் பதுக்கி வைத்திருந்த 750 லிட்டர் சாராய ஊறல், 50 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சுந்தரமூர்த்தி, சேட்டு ஆகியோர் மீது வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : mountain ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்!