கம்பம் செப்.11: கம்பம் நகராட்சி சார்பாக ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி கம்பத்தில் நடைபெற்றது. கம்பம் நகராட்சியின் கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் கம்பம் நகராட்சி அலுவலகத்திலிருந்து பேரணி தொடங்கியது. கம்பம் நகராட்சி மேலாளர் முனிராஜ் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நகராட்சி வருவாய் ஆய்வாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். கம்பம் முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேரணியாக கம்பம் நகர் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இந்த பேரணியில் நகராட்சி சுகாதார ஆய்வார்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.