×

விவசாயி தற்கொலை

தென்தாமரைகுளம். செப்.10:தென்தாமரைகுளம் அருகே விஜயநகரியை சேர்ந்தவர் ராஜேஷ் (34). விவசாயி. இவருக்கு பாக்கியலட்சுமி(30) என்ற மனைவியும் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் தனது மனைவி பாக்கியலட்சுமியுடன் குடும்ப பிரச்னை குறித்து பேசும்போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ராஜேஷ் வீட்டை விட்டு வெளியே வந்து விஜயநகரி அருகில் உள்ள தேவகுளத்தின் கரையில் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை