×

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

பெரியகுளம்,ஜூன் 25: பெரியகுளம் அருகே எ.புதுக்கோட்டை சேர்ந்த முருகன் மகன் கிஷோர்(9).  தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார் இவர்களது வீட்டருகே புதிதாக வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு பெற்றுள்ளனர். அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த கிஷோர், மின் இணைப்பு செல்லும் குழாயை தொட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். வடகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு