×

மணப்பெண் காதலனுடன் ஓட்டம் திடீர் மணமகள் ஆன மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் அதிரடி

கீழ்பென்னாத்தூர், ஜூன் 21: மணப்பெண் காதலனுடன் சென்றதால், அவரது தங்கையான மைனர் பெண்ணுக்கு நேற்று காலை நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அவர், ஏற்கனவே வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு தனது காதலனுடன் இளம்பெண் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் பெற்றோர், இளம்பெண்ணின் தங்கையான 17 வயது மைனர் பெண்ணுக்கு அதே மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து தர முடிவு செய்தனர்.

அதன்படி, திருமணம் மைனர் பெண்ணின் வீட்டில் நடக்க இருந்தது. இதற்காக நேற்றுமுன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணப்பெண் தயராக இருந்தார். அதற்கு முன்னதாகவே இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை சப்-கலெக்டர் உமாமகேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம்பெண்ணின் பெற்றோரிடம், சிறுவயதில் திருமணம் செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்னர். பின்னர் மைனர் பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திடீர் மணமகள் ஆன மைனர் பெண் திருமணம் தடைபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Minor ,bride stops ,
× RELATED புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக...