×

அனுமதியின்றி மது விற்றவர் கைது

போடி, ஜூன் 14: போடி குலாலர் பாளையத்தில் தொடர்ந்து டாஸ்மாக் சரக்குளை மொத்தமாக வாங்கி வந்து அதிக விலைக்கு விற்கின்றனர் என்று தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதையடுத்து போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ செல்வகுமார் ஆய்வு செய்ததில் அதே பகுதியை சேர்ந்த செல்வம்(55) என்பவர் 20 பாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பாட்டில்களை பறிமுதலுடன் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு