திருவாரூர், ஜூன் 14: கொள்ளிடம்- வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பாபநாசம் ஒன்றியம் அண்டக்குடி காவிரி ஆற்றில் குழாய் தாங்கும் பாலத்தில் செல்லும் 900 மி.மீ விட்டமுள்ள எம்.எஸ். குழாயில் வெல்டிங் பணிகள் காரணமாக வரும் 17 மற்றும் 18 தேதிகளில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி நகராட்சிகள், முத்துப்பேட்டை மற்றும் நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று திருவாரூர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் (பொ) கோபிநாத் தெரிவித்துள்ளார்.