×

கார் மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

திருக்கோவிலூர், ஜூன் 11: திருக்கோவிலூர், செவலை ரோட்டை சேர்ந்தவர் முருகன் (43). இவரது மகன் பவித்திரன் (18). இவர் நேற்று முன்தினம் மதியம் கனகனந்தல் சாலை அருகே உள்ள மண்பாதையில் இருந்து பைக்கில் திருக்கோவிலூர் சாலைக்கு திரும்பினார். அப்போது திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் இருந்து கனகனந்தல் நோக்கி சென்ற கார் பவித்திரன் பைக் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் பவித்திரனை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பவித்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : guy ,
× RELATED ஷ்ரேயாஸ் வருகை டெல்லிக்கு பெரிய பலம்: பயிற்சியாளர் கைப் உற்சாகம்