×

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

விழுப்புரம்,  ஜூன் 11: விழுப்புரம் அருகே பெரியதச்சூர் காவல்நிலையத்திற்குட்பட்ட  பகுதியில் சாராய வியாபாரிகளை தடுப்புக்காவலில் கைது செய்ய சிறப்பு எஸ்ஐ  கோபாலகிருஷ்ணன், போலீசார் லட்சுமிநாராயணன், வெள்ளிமேடுபேட்டையில் காணாமல்  போன குழந்தையை மீட்ட சிறப்பு எஸ்ஐ பிரத்தியுமன்னன், அவலூர்பேட்டையில் பிரபல  பைக்திருடனை கைது செய்து 17 பைக்குகளை மீட்ட சிறப்பு எஸ்ஐ சீனுவாசன்,  போலீசார் சண்முகம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு காவல்
நிலையத்தில் திருடுபோன  காரை மீட்ட எஸ்ஐ இளங்கோவன், போலீசார் பாபு, வெங்கடேசன், ஜாகீர்  ஆகியோருக்கும், வானூரில் குட்டையில் மூழ்கிய வாலிபரை மீட்ட சிறப்பு எஸ்ஐ  ஆறுமுகம், கள்ளக்குறிச்சியில் திருட்டுவழக்கில் குற்றவாளிகளை கைது செய்த  எஸ்ஐ வினோத், சிறப்பு எஸ்ஐ ஆரோக்கியதாஸ், சின்னசேலத்தில் திருட்டுவழக்கில்  குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் சுதாகர், எஸ்ஐக்கள் சண்முகம்,  துரைராஜ், உளுந்தூர்பேட்டையில் காணாமல்போன 3 வயது சிறுவனை மீட்டு ஒப்படைத்த  பெண் ஏட்டு அஷ்டலட்சுமி, எலவனாசூர்கோட்டையில் சாராய வியாபாரியை  தடுப்புக்காவலில் கைது செய்த எஸ்ஐ நாகராஜ், போலீசார் ஜெயபிரகாஷ், சுபாஷ்  ஆகியோரின் சிறப்பான பணியினை பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கப்பரிசினை  எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். அப்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்  கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : SSP ,Villupuram district ,
× RELATED நாடாளுமன்ற கடைசி கட்ட தேர்தலுடன்...