×

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

விழுப்புரம், ஜூன் 11: விழுப்புரம்  சாலாமேட்டைச் சேர்ந்தவர் ராதா மகன் சிவக்குமார்(31). கூலி வேலை  செய்துவருகிறார். இவர் வசிக்கும் தெருவில் 17 வயது  இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துள்ளார். இதனை அறிந்த  சிவக்குமார் அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலைசெய்துவிடுவேன் எனவும் மிரட்டல்  விடுத்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை  கூறி இளம்பெண் கதறி அழுதுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்  விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ  சட்டம் மற்றும் கொலைமிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்  சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை