×

வாணியம்பாடி அருகே நிலப்பிரச்ைன தொடர்பான வழக்கில் கோர்ட்டில் சாட்சி கூற சென்ற விவசாயி வெட்டிக்கொலை மர்ம ஆசாமிகளுக்கு வலை

வாணியம்பாடி, ஜூன் 11: வாணியம்பாடி அருகே நிலப்பிரச்ைன தொடர்பான வழக்கில் கோர்ட்டில் சாட்சி கூற சென்ற விவசாயியை வெட்டிக் கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் சாலையோரம் நேற்று காலை 9.30 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர் மங்ைகயர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சடலமாக கிடந்தவரின் உடலில் ஆங்காங்கே கத்தியால் வெட்டப்பட்டிருந்தது. மேலும், அவரது தலையில் கல்லை போட்டு மர்ம ஆசாமிகள் கொலை செய்துள்ளனர். அவரது சட்டை பையில் இருந்த ஆதார் கார்டை போலீசார் கைப்பற்றினர்.

முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், வாணியம்பாடி மிட்டூர் அடுத்த நாச்சியார்குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணிமாறன்(48) என்பதும், நேற்று காலை மிட்டூரில் இருந்து வாணியம்பாடிக்கு சென்றபோது, அவ்வழியாக வந்த மர்ம ஆசாமிகள் சிலர், மணிமாறனை கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மணிமாறனின் மனைவி துளசி ராணி(38) என்பவர் போலீசாரிடம் கூறுகையில், எங்களது நிலம் சம்பந்தமாக வாணியம்பாடி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எனது கணவர் மணிமாறன் வாணியம்பாடி நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல சென்றார். ஆனால் அவரை சிலர் முன்விரோத தகராறில் வெட்டி கொலை செய்துள்ளனர். எனவே கொலையாளிகளை உடனே கைது ெசய்யவேண்டும்’ என்றார்.
இந்நிலையில், போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : court ,landlord ,Vaniyampadi ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...