×

மது குடிப்பதில் மோதல்: மூவர் கைது

நாங்குநேரி, ஜூன் 7:  பரப்பாடி அருகே ஆனிகுளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் மகாராஜன்(27). இவர் நண்பர்களுடன் அங்குள்ள குளக்கரையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வடக்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளரான கணபதி(38), நண்பர்களுடன் மதுகுடிக்க வந்தார்.   மதுகுடிக்க இடையூறாக இருப்பதாக கூறி கணபதி, மகராஜன், அவரது நண்பர்களை அங்கிருந்து செல்ல கூறியதால் மோதல் ஏற்பட்டது. இதில் மகாராஜன், கணபதி காயமடைந்தனர். இருதரப்பினரின் புகாரின் பேரில் விஜயநாராயணம் எஸ்.ஐ. சஜீவ், கணபதி, தெற்கு கழுவூர் அருண்குமார், மகராஜன், மற்றொரு மகாராஜன் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிந்து, கணபதி, அருண்குமார், மகாராஜனை கைது செய்தார்.

Tags : Clash ,
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்