×

விஷம் சாப்பிட்டு மகன் சாவு

ரிஷிவந்தியம் ஜூன் 7: ரிஷிவந்தியம் அடுத்த இளையனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன்(40), கூலி தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் தனுஷ்(18), சென்னை அமரமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தனது கிராமத்திற்கு தனுஷ் வந்துள்ளார் மேலும் தொடர்ந்து படிக்கவும் விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். இதை கேட்ட முனியன், மகனை திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மனம் உடைந்த தனுஷ், சம்பவத்தன்று எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து முனியன், பகண்டை கூட்ரோடு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை