போடி, ஜூன் 4: போடி வினோபாஜி காலனியிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று சோம அவதாரம் திங்கள் கிழமை அமாவாசையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று திங்கள் சோம அவதார அமாவாசை என்பதால் சிவபெருமானுக்கு புலி தோல் அணிவித்து 16 வகையான அபிஷேங்களும் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவபெருமானிடம் தரிசனம் பெற்று பிரசாதங்களும் பெற்றனர்.