×

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கிய இளம்பெண் சடலமாக மீட்பு

பென்னாகரம், மே 28:  ஒகேனக்கல் காவிரியில் மூழ்கிய இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்த மதுசூதனன் மனைவி ஹேமலதா(23). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கோடை விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் குடும்பத்தோடு ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். அப்போது, ஆலாம்பாடி பகுதியில் காவிரியில் குளித்துக்கொண்டிருந்தபோது, ேஹமலதா திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஒகேனக்கல் போலீசார், பரிசல் ஓட்டிகள் உதவியுடன் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால், தேடும் பணி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை மீண்டும் ஹேமலதாவை தேடும் பணி தொடங்கியது. இதனிடையே, ஆலாம்படி பரிசல்துறை பகுதியில் ஹேமலதாவின் உடல் கரை ஒதுங்கியது. இதனை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Hogenakkal ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு