×

மேஸ்திரி தூக்கு போட்டு தற்கொலை

ஆற்காடு, மே 23: ஆற்காடு நல்லத்தண்ணீர் குளம் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்(36). இவரது மனைவி ரேவதி(32). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரேவதி தனது கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளை அழைத்து கீழ்விசாரத்தில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து, ரமேஷ் பல முறை கீழ்விசாரம் சென்று ரேவதியை அழைத்தும் வரவில்லையாம். மீண்டும் கடந்த 20ம் தேதி சென்று அழைத்துள்ளார். அப்போதும் வர மறுத்ததால் மனவேதனையடைந்த ரமேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

ரமேஷ் அறையில் சத்தம் வருவதை கேட்ட அங்கிருந்தவர்கள் ஓடிவந்து ரமேசை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ரமேஷின் தந்தை கோவிந்தன் நேற்று முன்தினம் இரவு ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Masters ,
× RELATED சில்லி பாயின்ட்…