×

வைகாசி விசாகத்தை முன்னிட்டு குறுக்குத்துறை மதுக்கடைக்கு நாளை விடுமுறை

நெல்லை, மே 17: நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில் நாளை (18ம் தேதி) வைகாசி விசாகம் நடப்பதால், கோயில் அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை எண்.10912  மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடத்திற்கு  விடுமுறை அளிக்க கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார். அன்று மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக எவ்விடத்திலும் மதுபானங்கள் விற்பனை மற்றும் மதுபானங்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : trip ,crossroads ,holidays ,
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...