×

மருதூர் பேரூராட்சியில் 25கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

குளித்தலை, மே16: குளித்தலை அடுத்த மருதூர் பேரூராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆய்வு பணி மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பணிக்கம்பட்டி நடுப்பட்டி கணேசபுரம், மருதூர் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் உணவகங்கள் ஆடு இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட ஒரே முறை பயன்படுத்தப்படும் 25 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு  ரூ.1200  அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வரும் காலங்களில் இது போன்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags : Maruthur Panchayat ,
× RELATED மாவட்டம் முழுவதும் 173.1 மிமீ பதிவு கரூரை குளிர்வித்த 2 மணி நேர மழை