×

கோயிலில் புகுந்து நிர்வாகியை கொல்ல முயற்சி

அருமனை, மே 14: அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பரன். இவர் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோயில் கமிட்டி தலைவராக உள்ளார். சம்பவத்தன்று விஸ்வாம்பரன் கோயிலில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், அஜித் ஆகியோர் கோயில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து விஸ்வாம்பரனை வெட்டுக்கத்தியால் தாக்க முயன்றுள்ளனர். இதில் இருந்து அதிர்ஷ்டவசமாக விஸ்வாம்பரன் உயிர் தப்பினார்.

இதைக்கண்டு அங்கு நின்றவர்கள் ராஜேஷ்குமார் மற்றும் அஜித்தை தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், தடுக்க வந்தவர்களையும் வெட்ட பாய்ந்துள்ளனர். அவர்கள் உயிர்ப்பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விஸ்வாம்பரன் அருமனை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் ராஜேஷ்குமார் மற்றும் அஜித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : manager ,
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்