மதுரை: மதுரை பீபீகுளம் ரத்தினசாமி நாடார் சாலையில் ஒரு நாய், குழந்தையின் தலையை வாயில் கவ்விக்கொண்டு நேற்று மதியம் அங்குமிங்கும் ஓடியது. அவ்வழியாக சென்ற ஒருவர், காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக தல்லாகுளம் போலீசார், அப்பகுதியில் கிடந்த குழந்தையின் தலையை மீட்டனர். தலையில் சாக்கடை கழிவுகள் ஒட்டியிருந்ததால், குழந்தையை யாரேனும் சாக்கடையில் வீசியிருக்கலாம்; அதன் தலையை நாய் தூக்கி வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் தலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் அறுக்கப்பட்ட அடையாளம் உள்ளதால் கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்….
The post நாய் தூக்கி வந்த குழந்தையின் தலை appeared first on Dinakaran.