×

சுரண்டை தேர் திருவிழாவில் போலீசாரை தாக்கிய ராணுவ வீரர் ைகது

சுரண்டை, மே 10:  சுரண்டையில் உள்ள பிரசித்திப்பெற்ற அழகுபார்வதியம்மன் கோயில் தேரோட்டம், நேற்று முன்தினம் (8ம் தேதி) மாலையில் நடந்தது. திருவிழாவை காண சுரண்டையை சேர்ந்த அரியானாவில் ராணுவ வீரராக பணிபுரியும் சுரேஷ் (27) என்பவர் ஊருக்கு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசாருக்கும், ராணுவ வீரர் சுரேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 2 போலீசாரை கம்பால், சுரேஷ் தாக்கியதாகவும், அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆயுதப்படை போலீசார் குமார், பேரானந்தசாமி ஆகியோர் சுரண்டை போலீசில் புகார் செய்தார். உயரதிகாரியின் உத்தரவின்பேரில் ராணுவ வீரர் சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : soldiers ,festival ,Suranti Chariwar ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...