தாழையூத்து, மே 10: கங்கைகொண்டான் சிப்காட் அருகில், கங்கைகொண்டான் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த பைக்கினை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பைக் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருட்டு போன துறையூரை சேர்ந்த வர்க்கீஸ் என்பவரது என்று தெரிய வந்தது. திருட்டு வண்டியில் அதே பகுதிக்கு ஜாலியாக வந்த திம்மராஜபுரம், உச்சிமாகாளி மகன் மாணிக்கராசா என்ற மண்டைஓடு(23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.