×

புளுதியூர் சந்தையில் ₹30 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், மே 9: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூர் சந்தையில்,  ₹30 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது.அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், புதன்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில், வாரந்தோறும் சுமார் 180க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், மாடு ₹22,500 முதல் ₹45,500 வரையும், ஆடு ₹3500 முதல் ₹8000 வரையும் விற்பனையானது. ஆகமொத்தம் ₹30 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு, மாடுகள் அதிக அளவில் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.


Tags : Puliyathi ,
× RELATED புளுதியூர் சந்தையில் 34 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை