×

புளுதியூர் சந்தையில் 34 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர்: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூர் சந்தையில், 34 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இதில் வாரந்தோறும் 200க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடுகள் 21,500 முதல் 43,000 வரையும், ஆடு 4,400 முதல் 8,900 வரையும் விற்பனையானது. மொத்தம் 34 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு, மாடுகள் அதிக அளவில் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Puliyathi , Pulutiyur, market, bulls, sale
× RELATED புளுதியூர் சந்தையில் ₹32 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை