×

திண்டிவனம் பகுதியில் காற்றுடன் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டிவனம்,மே, 9. திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளான சலவாதி, ஜக்காம்பேட்டை, எடையன்குளம், சிங்கனூர், ஓமந்தூர், எண்டியூர், பிரம்மதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காற்று வீசி வந்தது. பின்னர் மாலை 6:30 மணி முதல் காற்றுடன் கூடிய பரவலான  மழை பெய்தது.இதனால் கடந்த சில தினங்களாக வாட்டி வதைத்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திடீரென வெப்பத்தை தணிக்கும் வகையில் பரவலாக ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.



Tags : area ,Tindivanam ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி