×

அண்ணாமலையார் கோயில் அணையா விளக்கில் சேகரிக்கப்பட்ட தீப எண்ணெய் 15 கோயில்களுக்கு அனுப்பபட்டது

திருவண்ணாமலை, மே 9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அணையா விளக்கில் உபரியாக சேகரிக்கப்பட்ட தீப எண்ணெய் ஒருகால பூஜைகள் நடைபெறும் 15 ேகாயில்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அணையா விளக்கில் உபரியாக சேகரிக்கப்பட்ட தீப எண்ணெய் திருவண்ணாமலையை பகுதியில் உள்ள ஒருகால பூஜைகள் நடைபெறும் கோயில்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனை இணை ஆணையர் ஞானசேகர் கோயில்களுக்கு அனுப்பி வைத்தார். நேற்று ஒரே நாளில் 15 கோயில்களுக்கு தலா 15 லிட்டர் எண்ணெய் வீதம் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, இதுபோன்று மாவட்டம் முழுவதும் ஒருகால பூஜைகள் நடைபெறும் கோயில்களுக்கும் அணையா விளக்கில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப எண்ணெய் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Deepavali ,Annamalaiyar Temple ,temples ,
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...