அந்தியூர், மே 8: ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்லீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. இதில், பத்ரகாளியம்மன் திருக்கோயில் தலைமை குருக்கள் ராஜா சிறப்பு யாகத்தை நடத்தி வைத்தார். யாகத்தில் சிவாச்சாரியார் நீரில் அமர்ந்து வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு யாகம் நடந்தது. இவ்விழாவில் பொதுமக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.