×

வனப்பகுதி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

 

ஈரோடு, ஜூன் 4: கோபி அடுத்துள்ள எரங்காட்டூர், தொட்டகோம்பை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (32). ரிக் வண்டி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், கடந்த 1ம் தேதி தனது நண்பர் முத்தான் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார்.  இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் தெற்கு பர்கூர் காப்புகாடு பகுதியில் உள்ள ஒரு குட்டையில் ரமேஷ் சடலமாக மிதப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து பங்களாப்புதூர் போலீசில் தந்தை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் தனது நண்பர் முத்தானுடன் மது அருந்திவிட்டு குட்டையில் குளிக்கும் போது ரமேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post வனப்பகுதி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Erode ,Ramesh ,Thottakombai, Erangatur ,Gobi ,Muthan ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது