×

திருவெண்ணெய்நல்லூர் அருகே சூதாடிய 6 பேர் மீது போலீசார் வழக்கு: ₹47ஆயிரம் பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர், மே 7:  திருவெண்ணெய்நல்லூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்குபதிந்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 47 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.புதுப்பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் அதே ஊரில் உள்ள ஏரிக்கரை அருகே 6பேர் கொண்ட கும்பல் சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர்.

அதில் 3பேர் தப்பி ஓடினர். இதையடுத்து 3பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில் ரங்கநாதன் மகன் மணிகண்டன்(35), பாலு மகன் சந்தோஷ்(22), அமாவாசை மகன் ராஜவேல்(27), ரங்கநாதன் மகன் ராமமூர்த்தி(24), நடராஜன் மகன் சிலம்பரசன்(25), அப்பாவு மகன் ராஜிகாந்தி(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த 40புள்ளித்தாள்கள் மற்றும் ரூ. 47ஆயிரத்து 600 பணம் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,Thiruvannai Nallur ,Gudauta ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...