×

திண்டிவனம் அருகே கிணற்றில் குதித்து நர்சிங் மாணவன் தற்கொலை

திண்டிவனம், மே 7: திண்டிவனம் அடுத்த உலகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல், கூலி தொழிலாளியான இவரது மகன் ஆகாஷ்(18) தற்போது வெளியான 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் பெற்றோர் இவரை டிப்ளமோ நர்சிங் சேர்த்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் பெற்றோர் ஆகாஷை கண்டித்துள்ளனர். இதனால், மனம் உடைந்த ஆகாஷ்  அருகிலிருந்த 90 அடி ஆழமுள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் 50 அடி தண்ணீர் இருந்துள்ளது. ஆசாசுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் முத்துவேல் உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஜெயபால் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து இறந்த நிலையில், ஆகாஷ் உடலை மீட்டு பிரம்மதேசம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் ஆகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : nursing student ,suicide ,Tindivanam ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...