×

அரும்பராம்பட்டு-ஆற்கவாடி சாலையை சீரமைக்க கோரிக்கை

ரிஷிவந்தியம், மே 3:  ரிஷிவந்தியம் அடுத்த அரும்பராம்பட்டு கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து  ஆற்கவாடி செல்லும் தார்சாலை கடந்த 7 வருடத்திற்கு முன் போடப்
பட்டது. இச்சாலையை அரும்பராம்பட்டு, ஆற்கவாடி மற்றும் சுத்தமலை கிராமங்களை சேர்ந்த  பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தார்சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து தற்போது மண்சாலையாக மாறியுள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே, குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை