×

திருவிழாவில் மோசமான நடனம் நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் மனு

கரூர், மே 1:  தமிழ்நாடு திரைப்பட மேடைநடனக் கலைஞர்கள் நலச்சங்க தலைவர் ராஜசேகரன், பொதுசெயலாளர் காதர்மொய்தீன், மற்றும் நிர்வாகிகள் கரூர்  எஸ்பி அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  நடன கலைஞர்களை ஒன்றிணைத்து முறையான நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக பதிவு பெற்று செயல்பட்டு வருகிறோம். கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் சேமங்கியில் திருவிழாவில் மோசமான நடன நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். காவல்துறை அனுமதித்துள்ளது. கடவுள்களையும், கலாசாரத்தையும் கெடுக்கும் வகையில் நடந்துள்ளது. பலமுறை கைது செய்யப்பட்டு, வழக்கில் இருக்கும் ஒருவர் ஆடியிருக்கிறார், எஸ்பியிடம் இதுகுறித்து ஏற்கனவே புகார்அளித்துளளோம். இதில் உரிய நடவடிக்கை எடுக்ககேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.


Tags : SPP ,festival ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!