×

அரியலூர் அருகே நீர்நிலை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அரியலூர், ஏப். 30: அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில்நீர்நிலைகளை மேம்படுத்துவது, பராமரிப்பது குறித்த தகவல்களை பரிமாறி கொள்ளும் வகையில் நீர்நிலை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விளாங்குடி மக்கள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் தியாகராசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஏரிகளை தூர்வாருவது, வரத்து வாய்க்காலை சீரமைப்பது மற்றும் பல வழிகளில் நீரை சேமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. திரைப்பட உதவி இயக்குனர் மனோகுமரன், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம், சென்னையை சேர்ந்த சபரி, ஏரி குளங்கள் தூர்வார விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சுப்ரமணியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Waterfront Activists Meeting ,Ariyalur ,
× RELATED மக்காச்சோள பயிரில் உருவாகும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்