×

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம், ஏப். 28: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. சிறுமியர்களுக்கு சென்னை, ஈரோட்டில் செயல்பட்டு வருகிறது. முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக விளங்குவதற்கு 6ம் வகுப்பு, 7, 8ம் வகுப்பு ஆகிய வகுப்பில் படிக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கான மாநில அளவிலான தேர்வு வரும் மே 21ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. சிறுவர்களுக்கு தடகளம், இறகுபந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், நீச்சல் மற்றும் டென்னிஸ், சிறுமியர்களுக்கு தடகளம், இறகுபந்து, மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நடக்கிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் 2019-20ம் ஆண்டு சேர்க்கைக்குரிய படிவங்களை  www.sdat.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். மே 20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதிகள் தொடர்பான விவரங்களை இணையள முகவரியில் தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags : state gaming clubs ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை